இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிற...
| ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ | திலீப்குமார் ‘விளக்கு’ |
இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.
‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்:
மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
மொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் - ஜெயமோகன்
திலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா
திலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு
மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
ஆ.மாதவன் - சுட்டிகள்:
பாச்சி - ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்
ஆ.மாதவன் - ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் - அழியாச்சுடர்கள் தொகுப்பு
ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:
கிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு
நன்றி: சொல்வனம்
ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ திலீப்குமார் ‘விளக்கு’ இந...
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா
நாள்: 31 ஜனவரி 2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: இக்ஸா செண்டர்,
107 பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 8
(எழும்பூர் மியூசியம் எதிரே)
வண்ணநிலவன்
சி.மோகன்
அ.மார்க்ஸ்,
எஸ்.ராமகிருஷ்ணன்
சமயவேல்
சங்கர ராம சுப்ரமணியன்
வித்யாசங்கர்
விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள்.
கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.
அனைவரும் வருக
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா நாள்: 31 ஜனவரி 2010 நேரம்: மாலை 6 மணி இடம்: இக்ஸா செண்டர், 107 பாந்தி...
நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் சிறந்த எழுத்தாளராக உயர்ந்த இவர், ஏசுவின் தோழர்கள், சத்திய சோதனை, குருதி புனல், தந்திரபூமி, ராமானுஜர், வெந்து தணிந்த காடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் மொத்தம் 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைகள், 10 நாடகங்கள், 2 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இவர், சாகித்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்பட 8-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறா
நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 ப...