யாருமில்லாத பிரதேசத்தில்- நகுலன்

By 8:41 PM ,

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை! nagulan-by-viswamithran-9

*******

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

*******

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

*******

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

*******

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

*******
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

*******

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

*******

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

*******

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

*******

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

*******

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

*******

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!

***********
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

*******

நன்றி : சாகர அலை , திண்ணை .

You Might Also Like

2 comments

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    நகுலனின் எழுத்துக்கள் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து படித்தாலும் இனிமையாக இருக்கும்

    ReplyDelete
  2. அழகான, எளிமையான, ஆழமான கவிதைகள்

    ReplyDelete

Related Posts with Thumbnails