இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி
இன்னொரு கேலிசித்திரம்
காலம் என் கேலிச்சித்திரத்தை
வரைந்துவிட்டது
உயரத்தையும்
முன்பற்க்களின் இடைவெளியையும்
நிச்சயம் கணக்கில் எடுக்கும்
என்று நினைத்திருந்தேன்
எடுக்கவில்லை
என் கூர்மையற்ற மூக்கைக்கூட
அது பொருட்படுத்தக் காணோம்
கனத்த கண்ணாடியின்றியும்
முகத்தின் சாயல்
பிடிப்பட்டிருந்தது
அதன் கோடுகளுக்குள்
என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன
என் சித்திரத்தை விட
என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது
எனினும்
என்னுடைய எந்த அடையாளத்தை
அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம்
என்ற புதிரை
என்னால் விடுவிக்க முடியவில்லை
அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது
அடுத்த நாளில்
இன்னொரு கேலிச் சித்திரம்…
*****
நன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்
4 comments
பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்
ReplyDeleteகல்யான்ஜிக்கும் நன்றிகள்
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்விற்கு நன்றி ராம் :)
ReplyDeleteஎன் சித்திரத்தை விட என் கேலி சித்திரம் நன்றாக இருக்கிறது என்ற வரிகளில் இந்த கவிதை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்
ReplyDelete